நிதி முறைகேடு வழக்கு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவியிடம் விசாரணை
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இதையடுத்து புதிய அதிபராக சிறிசேனா பதவியேற்றார். இதையடுத்து இலங்கையில் முந்தைய ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிர்வாகத்தில் நிதி முறைகேடு செய்த வழக்கில் ராஜபக்சேவின் மகன் யோசித்த ராஜபக்சே கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே மீதான மோசடி புகார் குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, இன்று ஆஜரான அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மோசடி தொடர்பாக அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு ஷிராந்தி பதில் அளித்தார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தனது குடும்ப தொலைக்காட்சியின் ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு அரசு மதிப்பீட்டை விட குறைவான விலையில் வீடு ஒதுக்கும்படி வீட்டு வசதி துறையிடம் ஷிராந்தி கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது..
இலங்கையில் மைத்ரிபால சிறிசேன அரசு அமைந்த பின்னர் ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு வழக்குகள் தொடரபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications