கோத்தபாயவிடம் விடுதலைப் புலிகளைப் பற்றி போட்டு கொடுத்தேன்- கேபி பரபர பேட்டி
2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் சிலர் எங்கே என கோத்தபாய தம்மிடம் கேட்டதாகவும் 2 மணிநேரம் அவருடன் உரையாடினேன் எனவும் புலிகளின் மூத்த தலைவர் கேபி தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவிடம் விடுதலைப் புலிகள் தொடர்பாக தகவல்களை தெரிவித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அந்த இயக்கத்தின் முன்னாள் வெளிநாட்டு பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் என்ற கேபி.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு பொறுப்பாளராக இருந்தவர் கேபி. பிரபாகரனுக்கு அடுத்த நிலை தலைவராக இருந்து வெளிநாட்டில் இருந்து புலிகளுக்கான ஆயுதங்களை அனுப்பியவர்.

ஆனால் 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் கேபி ஓரம்கட்டப்பட்டார். இறுதி யுத்த காலத்தில் மீண்டும் கேபி வெளிநாட்டு பொறுப்பாளராக்கப்பட்டார்.
கேபி கைது
2009-ம் ஆண்டு மே மாதத்துடன் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மலேசியாவில் இருந்த கேபி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.
கிளிநொச்சி இல்லம்
தற்போது போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கிளிநொச்சியில் பராமரித்து வருகிறார் கேபி. இந்நிலையில் இந்தியாவின் ஜீ குழுமத்தின் சர்வதேச செய்திகளுக்கான 'WionTv' சேனலுக்கு கேபி ஒரு நீண்ட பேட்டியளித்துள்ளார். அதில் 2009-ல் என்ன நடந்தது என்பதை பற்றி கேபி கூறியுள்ளதாவது:
இலங்கை உளவுத்துறை
2009-ம் ஆண்டு பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் மலேசியாவில் அந்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களுக்கு இலங்கை உளவுத்துறை உதவியது எனக்கு பின்னர்தான் தெரியவந்தது.
கொழும்பில் கோத்தபாய வீட்டில்...
மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். கொழும்பில் அப்போது பாதுகாப்புத் துறை செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சேவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
புத்தர் சிலை
நிச்சயம் என்னை கொல்லத்தான் போகிறார்கள் என்கிற நிலையில்தான் அங்கு சென்றேன். கோத்தபாய ராஜபக்சேவின் வீட்டில் ஒரு புத்தர் சிலை இருந்தது. அந்த சிலையைப் பார்த்தபோது எனக்கு ஏதோ ஒரு உணர்வு தோன்றியது.
மறுபிறப்பு
எனக்கு எதுவும் நடக்காது என நினைத்துக் கொண்டேன். நான் மறுபிறப்பு எடுத்ததாக கருதினேன். மாடியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே இறங்கி வந்தார். இருவரும் கைகளை குலுக்கிக் கொண்டோம்.
கோத்தபாய கேட்டது..
நாங்கள் 2 மணிநேரம் உரையாடினோம். அப்போது என்னைப் பற்றியும் சில விடுதலைப் புலிகள் எங்கே என்பது பற்றியும் கோத்தபாய கேட்டார். என்னுடைய எதிர்கால திட்டம் என்ன என்பது பற்றியும் கோத்தபாய கேட்டு தெரிந்து கொண்டார்.
கொழும்பில் 2 ஆண்டுகாலம்
பின்னர் கொழும்பில் 2 ஆண்டுகாலம் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். அங்கே பல அதிகாரிகள் என்னை வந்து சந்தித்தனர்.
இவ்வாறு கேபி கூறியுள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications