நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை வெல்ல வைக்க வியூகம் வகுக்கும் கோத்தபாய!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சே வகுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்த நிலையில் அவரது ஒட்டுமொத்த குடும்பமே ஊழல் முறைகேட்டில் சிக்கியது. கடந்த 6 மாத காலமாக மகிந்த ராஜபக்சே அரசியல் துறவறம் பூண்ட கதையாக இருக்கிறார்.

இந்நிலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வென்று இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவது என்பதில் ராஜபக்சே சகோதரர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.
இதில் முதல் கட்டமாக சிறையில் இருந்த பசில் ராஜபக்சே ஜாமீனில் விடுதலை ஆகி இருக்கிறார். மற்றொரு சகோதரரான கோத்தபாய தற்போது மகிந்த ராஜபக்சேவை வெல்ல வைப்பதற்கான வியூகத்தில் களமிறங்கியுள்ளார்.
இதற்காக தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிக் கொண்டு மகிந்தவுக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறாராம் கோத்தபாய. இப்படிச் செய்வதன் மூலம் மகிந்தவின் ஆதரவாளர்கள் எதிரணிக்கு தாவாமல் கண்காணிக்க முடியும் என்பதும் மற்றொரு கணக்காம்.
அத்துடன் தற்போது சிறிசேன பக்கம் இருப்பவர்களை மகிந்த அணிக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளையும் நடத்த கோத்தபாய திட்டமிட்டுள்ளாராம்.
இப்பவே இலங்கை தேர்தல் களைகட்டுதே!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications