கச்சத்தீவு: மார்ச் 14,15-ல் தேவாலய திருவிழா- 4,000 இந்திய பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி!
டெல்லி: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளது. கச்சத்தீவு செல்வதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரத்துக்கு மிக அருகே உள்ளது கச்சத்தீவு. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதி கச்சத்தீவு. இதனால் கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்கள் புனித அந்தோணியார் தேவாலயத்தை கட்டினர்.

புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் ஈழத் தமிழ் மீனவர்கள் இணைந்து பங்கேற்பர். இந்த திருவிழாவானது பண்பாட்டு உறவு சார்ந்ததாகவும் கடந்த காலங்களில் இருந்தது. பண்டமாற்று முறை, இருநாட்டு மீனவர் குடும்பங்களிடையே திருமண உறவு வலுப்படுத்துதல் என பல்வேறு வாழ்வியல் அம்சங்களுடன் கச்சத்தீவு இணைந்ததாக இருந்தது.
ஆனால் 1974-ம் ஆண்டு கச்சத்தீவை, இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதனால் கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளிட்டவை பறிபோயின. 1976-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் இந்த மீன்பிடி உரிமை, வழிபாட்டு உரிமை உள்ளிட்டவை மீள நிலைநாட்டப்பட்டன. ஆனால் 1980களில் ஈழத் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தால் கச்சத்தீவு பகுதிக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் செல்வது என்பது கேள்விக்குறியானது. கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவும் இல்லாமலேயே போனது.
2009-ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு அந்தோணியார் தேவாலய திருவிழா மார்ச் 14,15 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளன. இலங்கை யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர் பிரதீபன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் பாதிரியார்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும் நடப்பாண்டு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் மொத்தம் 8,000 பேர் பங்கேற்கலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்கள், கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications