இலங்கையில் இன அழிப்பு நாள் நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இன அழிப்பு நினைவு நாளை அனுசரிக்க இலங்கை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இலங்கையின் வடகிழக்கு மாகாணமான முல்லைத்தீவில் வரும் 18ம்தேதி, இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழ் தேசிய மக்கள் ஃபிரான்ட் அமைப்பு திட்டமிட்டிருந்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு, முல்லைத்தீவு நீதிபதியிடம் தடையுத்தரவு பெற்றுவிட்டது காவல்துறை. இதுகுறித்து இலங்கை தமிழ் அரசியல் பிரமுகர் கஜன் பொன்னம்பலமும் இத்தகவலை உறுதி செய்தார்.
2009 மே 18ம்தேதி, உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இந்த போரில், ஐநா ஆய்வுப்படி, தமிழர்கள் 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 6ம் ஆண்டாக, இந்த சோகத்தை நினைவுகூற இலங்கை தமிழ் அமைப்புகள் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications