இறுதி யுத்தத்தின் போது ஏவுகணைகளை வாங்க முயற்சித்த விடுதலைப் புலிகள்... திடுக் தகவல்
கொழும்பு: இலங்கை அரசுடனான இறுதி யுத்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து ஏவுகணைகளை வாங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கிளிநொச்சி இலங்கை ராணுவ வசம் போனது. 2009 மே 18-ந் தேதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்தது.
இந்த இறுதிகால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய கேபி என்கிற செல்வராசா பத்மநாதன். சர்வதேச பொறுப்பாளராக செயல்பட்டு வந்த காஸ்ட்ரோவை நீக்கி கேபியை நியமிக்கும் உத்தரவு கடிதத்தை கிளிநொச்சியில் செயல்பட்ட என்ஜிஓ ஒன்றின் மூலம் மலேசியாவில் இருந்த கேபிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொலைபேசியில் நேரடியாக பேசுவது கிடையாது என்பதால் அவரது முதன்மை தளபதியாக இருந்த வேலு என்பவர் மூலமே கேபி தொடர்பில் இருந்து வந்தார். இந்த உரையாடல்களை இலங்கை அரசின் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சே, ஒட்டுக் கேட்டு வந்தார்.
அப்போதுதான், பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, ஏவுகணைகள் கிடைத்தால் வாங்கி அனுப்புங்கள் என கேபியிடம் கூறியிருக்கிறார். இதில் கேபி கடுப்பாகி சார்லஸ் ஆண்டனியை திட்டினார் எனவும் அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல், நந்திகடலில் சிக்கிய தமிழர்களை மீட்க அமெரிக்கா கப்பல் ஒன்றை அனுப்பி வைக்க முயற்சித்தது; ஆனால் இதை பிரபாகரன் விரும்பமாட்டார் என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்க, 'நாங்கள் அமெரிக்கர்கள்! புலிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரித்ததாகவும் அப்பத்திரிகையில் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications