இறுதி யுத்தத்தின் போது ஏவுகணைகளை வாங்க முயற்சித்த விடுதலைப் புலிகள்... திடுக் தகவல்
கொழும்பு: இலங்கை அரசுடனான இறுதி யுத்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து ஏவுகணைகளை வாங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கிளிநொச்சி இலங்கை ராணுவ வசம் போனது. 2009 மே 18-ந் தேதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்தது.
இந்த இறுதிகால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய கேபி என்கிற செல்வராசா பத்மநாதன். சர்வதேச பொறுப்பாளராக செயல்பட்டு வந்த காஸ்ட்ரோவை நீக்கி கேபியை நியமிக்கும் உத்தரவு கடிதத்தை கிளிநொச்சியில் செயல்பட்ட என்ஜிஓ ஒன்றின் மூலம் மலேசியாவில் இருந்த கேபிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொலைபேசியில் நேரடியாக பேசுவது கிடையாது என்பதால் அவரது முதன்மை தளபதியாக இருந்த வேலு என்பவர் மூலமே கேபி தொடர்பில் இருந்து வந்தார். இந்த உரையாடல்களை இலங்கை அரசின் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சே, ஒட்டுக் கேட்டு வந்தார்.
அப்போதுதான், பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, ஏவுகணைகள் கிடைத்தால் வாங்கி அனுப்புங்கள் என கேபியிடம் கூறியிருக்கிறார். இதில் கேபி கடுப்பாகி சார்லஸ் ஆண்டனியை திட்டினார் எனவும் அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல், நந்திகடலில் சிக்கிய தமிழர்களை மீட்க அமெரிக்கா கப்பல் ஒன்றை அனுப்பி வைக்க முயற்சித்தது; ஆனால் இதை பிரபாகரன் விரும்பமாட்டார் என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்க, 'நாங்கள் அமெரிக்கர்கள்! புலிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரித்ததாகவும் அப்பத்திரிகையில் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications