இறுதி யுத்தத்தின் போது ஏவுகணைகளை வாங்க முயற்சித்த விடுதலைப் புலிகள்... திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அரசுடனான இறுதி யுத்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து ஏவுகணைகளை வாங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கிளிநொச்சி இலங்கை ராணுவ வசம் போனது. 2009 மே 18-ந் தேதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்தது.

இந்த இறுதிகால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய கேபி என்கிற செல்வராசா பத்மநாதன். சர்வதேச பொறுப்பாளராக செயல்பட்டு வந்த காஸ்ட்ரோவை நீக்கி கேபியை நியமிக்கும் உத்தரவு கடிதத்தை கிளிநொச்சியில் செயல்பட்ட என்ஜிஓ ஒன்றின் மூலம் மலேசியாவில் இருந்த கேபிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

LTTE try to get missiles?

மேலும் பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொலைபேசியில் நேரடியாக பேசுவது கிடையாது என்பதால் அவரது முதன்மை தளபதியாக இருந்த வேலு என்பவர் மூலமே கேபி தொடர்பில் இருந்து வந்தார். இந்த உரையாடல்களை இலங்கை அரசின் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சே, ஒட்டுக் கேட்டு வந்தார்.

அப்போதுதான், பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி, ஏவுகணைகள் கிடைத்தால் வாங்கி அனுப்புங்கள் என கேபியிடம் கூறியிருக்கிறார். இதில் கேபி கடுப்பாகி சார்லஸ் ஆண்டனியை திட்டினார் எனவும் அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.

அதேபோல், நந்திகடலில் சிக்கிய தமிழர்களை மீட்க அமெரிக்கா கப்பல் ஒன்றை அனுப்பி வைக்க முயற்சித்தது; ஆனால் இதை பிரபாகரன் விரும்பமாட்டார் என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்க, 'நாங்கள் அமெரிக்கர்கள்! புலிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரித்ததாகவும் அப்பத்திரிகையில் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+