நிதி மோசடி புகார்: விசாரணைக் குழு முன்பு ஆஜரானார் மகிந்த ராஜபக்சே.. இன்று கைது?
கொழும்பு: நிதி மோசடி புகார் தொடர்பாக விசாரணைக் குழு முன்பு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நேரில் ஆஜராகியுள்ளார். இன்றைய விசாரணையின் முடிவில் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் கொழும்பில் பரபரப்பு நிலவி வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தலின் போது அரசு தொலைக்காட்சிகளில் மகிந்த ராஜபக்சே விளம்பரம் செய்திருந்தார். ஆனால் இந்த விளம்பரங்களுக்கான கட்டணத்தை அவர் செலுத்தாமல் மோசடி செய்தார் என்பது புகார்.

இது தொடர்பாக ஊழல்களுக்கான இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கெனவே மகிந்த ராஜபக்சேவின் வீட்டுக்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜனாதிபதி ஆணைக் குழு முன்பாக மகிந்த ராஜபக்சே ஆஜராகி உள்ளார். இன்றைய விசாரணையின் முடிவில் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளதால் கொழும்பில் அவரது ஆதரவாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்சே கைது செய்யப்பட்டால் அதனைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் மற்றும் வன்முறையில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications