நிதி மோசடி புகார்: விசாரணைக் குழு முன்பு ஆஜரானார் மகிந்த ராஜபக்சே.. இன்று கைது?
கொழும்பு: நிதி மோசடி புகார் தொடர்பாக விசாரணைக் குழு முன்பு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நேரில் ஆஜராகியுள்ளார். இன்றைய விசாரணையின் முடிவில் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் கொழும்பில் பரபரப்பு நிலவி வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தலின் போது அரசு தொலைக்காட்சிகளில் மகிந்த ராஜபக்சே விளம்பரம் செய்திருந்தார். ஆனால் இந்த விளம்பரங்களுக்கான கட்டணத்தை அவர் செலுத்தாமல் மோசடி செய்தார் என்பது புகார்.

இது தொடர்பாக ஊழல்களுக்கான இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கெனவே மகிந்த ராஜபக்சேவின் வீட்டுக்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜனாதிபதி ஆணைக் குழு முன்பாக மகிந்த ராஜபக்சே ஆஜராகி உள்ளார். இன்றைய விசாரணையின் முடிவில் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளதால் கொழும்பில் அவரது ஆதரவாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்சே கைது செய்யப்பட்டால் அதனைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் மற்றும் வன்முறையில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications