யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை வீடியோ கான்பரன்சில் திறந்து வைக்கும் மோடி
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் சீரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 18-ந் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளார்.
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது துரையப்பா விளையாட்டரங்கம். இந்த விளையாட்டரங்கத்தை சீரமைக்க இந்தியா நிதி உதவி செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இவ்விளையாட்டரங்கம் சீரமைக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த விளையாட்டரங்கத் திறப்பு விழா வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியும் மைத்ரிபால சிறிசேனவும் இணைந்து விளையாட்டரங்கத்தைத் திறந்து வைத்து உரையாற்ற உள்ளனர். இந்த விளையாட்டரங்கத்தால் யாழ்ப்பாணத்தின் 50,000 மாணவர்கள் பயனடைவர்.