இலங்கை தேர்தல் களம்.. மட்டக்களப்பில் சவால்விடும் 'நாம் திராவிடர் கட்சி'
மட்டக்களப்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக 'நாம் திராவிடர்' என்ற புதிய கட்சி களமிறங்கியுள்ளது.
இது தொடர்பாக நாம் திராவிடர் கட்சியின் தலைவர் மோகன் கூறியதாவது:
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நாங்கள் நிராகரிக்கிறோம். நாம் திராவிடர் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலான கட்சியாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விதவைகளுக்கான வாழ்வாதாரம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே தேர்தலில் நிற்கிறோம்.
நடைபெறும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளும் பேரினவாத கட்சிகளுடன் இரகசிய உடன் படிக்கைகளை செய்து கொண்டுதான் வந்துள்ளன. ஆனால் நாம் திராவிடர் கட்சி எந்த ஒரு பேரினவாதக்கட்சியுடன் உடன்பாடு செய்து கொள்ளாமல் தனித்தே போட்டியிடுகிறோம்.
இவ்வாறு மோகன் கூறினார்.