வெளிநாட்டு சிறுநீரகங்களை தானம் பெற இலங்கை அரசு தடை
வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இந்திய இளைஞர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் சிறுநீரகங்கள் அதிகப் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைடுத்து இலங்கை அரசு வெளிநாட்டவர்களிடமிருந்து கிட்னி தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'வெளிநாட்டவர்களிடமிருந்து பெறப்படும் சிறுநீரக தானத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. இலங்கையில் சிறுநீரக தானம் வழங்கும் கொடையாளர்களுக்கு மருத்துவமனைகளில் பணம் வழங்கக்கூடாது. மேலும் உடல் உறுப்புகளை தானம் வழங்குவது இலங்கையில் தற்போது அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வறுமையில் சிக்கி தவிக்கும் ஏழை இளைஞர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் சிறுநீரகங்கள் அதிகளவில் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக 2012ஆம் ஆண்டில் முதன்முதலாக தகவல்கள் வெளியாகின.
2012ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலும் சுமார் 1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகங்களை தானம் செய்திருப்பதும் தெரியவந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்ததாகக் கூறி கொழும்புவிலிருந்து அகமதாபாத்திற்கு அவரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
குஜராத் போலீசார் தினேஷின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவரது சிறுநீரகம் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுநீரகங்கள் திருட்டில் ஈடுபட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அது போல இலங்கையில் 7 பேரை கொழும்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் இருந்து இளைஞர்களைக் கொண்டு வந்து அவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் அதிகப் பணம் கொடுத்து சிறுநீரகங்கள் வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைடுத்து இலங்கை அரசு வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications