வெளிநாட்டு சிறுநீரகங்களை தானம் பெற இலங்கை அரசு தடை
வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இந்திய இளைஞர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் சிறுநீரகங்கள் அதிகப் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைடுத்து இலங்கை அரசு வெளிநாட்டவர்களிடமிருந்து கிட்னி தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'வெளிநாட்டவர்களிடமிருந்து பெறப்படும் சிறுநீரக தானத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. இலங்கையில் சிறுநீரக தானம் வழங்கும் கொடையாளர்களுக்கு மருத்துவமனைகளில் பணம் வழங்கக்கூடாது. மேலும் உடல் உறுப்புகளை தானம் வழங்குவது இலங்கையில் தற்போது அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வறுமையில் சிக்கி தவிக்கும் ஏழை இளைஞர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் சிறுநீரகங்கள் அதிகளவில் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக 2012ஆம் ஆண்டில் முதன்முதலாக தகவல்கள் வெளியாகின.
2012ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலும் சுமார் 1,200 இந்தியர்கள் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரகங்களை தானம் செய்திருப்பதும் தெரியவந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்ததாகக் கூறி கொழும்புவிலிருந்து அகமதாபாத்திற்கு அவரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
குஜராத் போலீசார் தினேஷின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவரது சிறுநீரகம் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுநீரகங்கள் திருட்டில் ஈடுபட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அது போல இலங்கையில் 7 பேரை கொழும்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் இருந்து இளைஞர்களைக் கொண்டு வந்து அவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் அதிகப் பணம் கொடுத்து சிறுநீரகங்கள் வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைடுத்து இலங்கை அரசு வெளிநாட்டவர்களிடமிருந்து சிறுநீரக தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications