இலங்கை: தொலைபேசி அழைப்பை ஏற்காத தூதரை திருப்பியழைத்த அதிபர்
ஆஸ்திரியாவுக்கான இலங்கை தூதர் மற்றும் பிற தூதரக ஊழியர்கள், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை எனக்கூறி அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மைத்திரி பால சிறிசேன, வியன்னாவில் தூதரிடம் பேச விரும்பியுள்ளார். ஆனால், அங்குள்ள தூதரக அலுவலகத்தை நான்கரை மணி நேரமாக தொடர்பு கொள்ள முடியவில்லை
"கடந்த வாரம் நான் தூதரிடம் பேச விரும்பினேன். என்னுடைய பணியாளர்கள் நான்கரை மணி நேரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். 6 தொலைபேசிகளிலும் மணி அடித்தது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. இது ஆஸ்திரியாவுக்கான தூதரகம் மட்டுமல்ல. மேலும் நான்கைந்து நாடுகளுக்குமான தூதரகமும் உள்ளது"
"6 தொலைப்பேசிகளும் அடித்த நிலையில் நான்கரை மணி நேரமாக அதனை எடுக்க யாரும் இல்லை. இந்த ஒரு தூதரகத்துக்கு மட்டுமல்ல, மேலும் பிற தூதரகத்துக்கும் செய்தி அனுப்ப நான் விரும்பினேன்" என சிறிசேன தெரிவித்தார்.
தூதரையும், ஊழியர்களையும் ஏன் திரும்ப அழைத்தார் என கொழும்புவில் ஒரு விழாவில் பேசும்போது தெரிவித்தார்.
இந்நிலையில், தூதரகத்தின் தொலைபேசிகளை எடுக்கவில்லை என அவர்கள் திரும்பி அழைக்கப்பட்டார்கள் என்ற ஊடக செய்தியை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
அனைத்து ஊழியர்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்பது தவறு. தூதரும், பிற ஊழியர்களும் தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரின் செய்தி தொடர்பாளர் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனரா அல்லது அவர்களின் அலைபேசியில் அழைத்தனரா என்பது குறித்து சிறிசேன அலுவலகம் தெளிவுபடுத்தவில்லை.
பிற செய்திகள்:
- புளோரன்ஸ் புயல்: வரலாறு காணா வெள்ளம்; தொடர்பு அறுந்துபோன அமெரிக்க நகரம்
- நீதிமன்றம், போலீஸ் மீது வசை: எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு
- கடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் - தீர்வுக்கு என்ன வழி?
- தந்தை பெரியாரின் பார்வையில் காதல் முதல் கௌரவம் வரை
- யார் இந்தப் பெரியார்: அவர் விட்டுச் சென்ற செல்வம் என்ன?












Click it and Unblock the Notifications