இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள்... சாடும் ரணில்
அம்பந்தோட்டா: இந்தியாவுடனான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சாடியுள்ளார்.
இந்தியாவுடனான பொருளாதாரம்- தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. இலங்கையின் இயற்கை வளத்தை இந்தியா கொள்ளையடிக்கவே இந்த ஒப்பந்தங்கள் போடப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேலும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. அண்மையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை பயணம் மேற்கொண்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், இலங்கையின் தேசதுரோகிகள் என கடுமையாக சாடியுள்ளார் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. அம்பந்தோட்டாவில் செய்தியாளர்களிடம் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது:
இந்தியாவுடன் பொருளாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள கொள்ள இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இத் திட்டத்துக்கு பல நிறுவனங்கள், சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இலங்கையின் பொருளாதாரத்தை அன்னிய நாட்டுக்கு தாரைவார்க்கும் முயற்சி என விமர்சிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், வேலைவாய்ப்புக்காக இலங்கைக்கு இந்தியர்கள் அதிக அளவில் வருகை தருவர். இதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் இலங்கை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்ற தவறான கருத்தையும் பரப்பி வருகின்றனர்.
உண்மையில் இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கை இளைஞர்களுக்குதான் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆகையால் இந்த ஒப்பந்தத்தைத் தடுக்க நினைக்கும் சக்திகள் தேசத் துரோகிகள்தான். இந்தியாவைப் போன்று பெரிய சந்தையில்லாத சீனா, இலங்கையில் முதலீடு செய்வதால் எந்த ஒரு பயனுமே இல்லை.
வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறோம். அதை நிறைவேற்ற வேண்டியது எங்களது கடமை.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications