யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புகளை உடைத்துக் கொண்டு மோடியை 'நெருங்கிய' இளைஞரால் பெரும் பரபரப்பு!!
யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த போது பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு 20 வயது இளைஞர் ஒருவர் அவரை நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13-ந் தேதி இலங்கை சென்றிருந்தார். பின்னர் 14-ந் தேதியன்று ஈழத் தமிழர்களின் தாயகப் பிரதேசமான யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தார்.

யாழ்ப்பாணத்தின் இளவாலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த போது மணி மாலை 4.
இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேடைக்கு பின்புறமாக காரில் ஏறுவதற்காக பிரதமர் மோடி இறங்கி வந்தார். அப்போது திடீரென கமாண்டோ பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொண்டு 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் மோடியை நெருங்கினார். இருப்பினும் அந்த இளைஞரால் மோடியை நெருங்க முடியவில்லை.
அந்நபரை கொத்தாகப் பிடித்து சிறப்பு கமாண்டோ படையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது இந்திய பிரதமர் மோடியுடன் கை குலுக்கி படங்கள் எடுத்துக் கொள்ள நினைத்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் இலங்கை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது அந்த இளைஞரை இலங்கை போலீஸ் விடுவித்ததாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் எப்படி குறைபாடு ஏற்பட்டது என்பது குறித்து ரா, ஐ.பி. உள்ளிட்ட அமைப்புகள் முழு வீச்சில் விசாரணையை நடத்தி வருகின்றன.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications