தமிழக தலைவர்கள் கரடியாய் கத்த.... கச்சத்தீவில் கமுக்கமாக புதிய தேவாலயம் கட்டும் சிங்கள கடற்படை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவை மீட்போம் என்கிற விவகாரம் தமிழக தேர்தல் களங்களில் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது... ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்டும் பணிகளை இலங்கை கடற்படை தொடங்கி உள்ளது.
தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு. இதற்கு எதிராக 30 ஆண்டுகாலமாக தமிழகம் குரல் கொடுத்து வருகிறது.
உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனியே 2009-ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழக மற்றும் ஈழத் தமிழர்கள் இணைந்து பங்கேற்று வருகின்றனர்.

அந்தோணியார் திருவிழா
பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அங்கு போதுமான வசதி இல்லை. இதனால் கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

புதிய தேவாலயம்
இதனடிப்படையில் புதிய தேவாலயத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த திங்களன்று நடைபெற்றது. இதில் இலங்கை கடற்படையின் வடக்கு பகுதி அதிகாரிகள் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின், குருமுதல்வர் ஜோசப் தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலங்கை கடற்படை
இலங்கை கடற்படைதான் புதிய தேவாலய கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவை கடற்படை கப்பல்கள் மூலம் கச்சத்தீவில் இறக்கப்பட்டுள்ளன.

அன்று தமிழர் ஓய்வெடுத்த நிலம்
கச்சத்தீவைப் பொறுத்தவரை புதர்காடுதான். இருப்பினும் இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கு முன்னர் வரை தமிழக மீனவர்கள் மீன்பிடி வலைகளை உலர்த்தி ஓய்வெடுக்கும் இடமாக இருந்து வந்தது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications