கிளிநொச்சி அருகே திடீரென ராணுவம் குவிப்பு.. சோதனைகள்.. பதற்றத்தில் மக்கள்
கொழும்பு: இலங்கையில், கிளிநொச்சி அருகேயுள்ள, முக்கொம்பன் கிராமத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில், ஈஸ்டர் திருவிழாவில் பல்வேறு தேவாலயங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், தமிழகத்திலிருந்து அந்த அமைப்புக்கு சிலர் துணை போனதாக, அந்த நாட்டு ராணுவம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கிளிநொச்சி அருகேயுள்ள முக்கொம்பன் கிராமத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று அதிகாலை முதல் இவ்வாறான சூழல் அங்கு நிலவுகிறது. அந்த கிராமத்தை மட்டும் ஏன் குறி வைத்து சோதனை நடக்கிறது என தெரியவிலி்லை.
திடீரென நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் முக்கொம்பன் கிராமத்தில் சோதனை நடத்தியதால், மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.
கிளிநொச்சி விடுதலை புலிகள் ஆதிக்கத்தில் இருந்தபகுதி. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ராணுவத்தின் இந்த திடீர் குவிப்பும், சோதனைகளும் ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications