மன்மோகன்சிங் யாழ். வருவதை கடுமையாக எதிர்ப்போம்: ரணில் கட்சி அறிவிப்பு
கொழும்பு: பிரதமர் மன்மோகன்சிங் யாழ்ப்பாணம் செல்வதை மிகக் கடுமையாக எதிர்ப்போம் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அந்த கட்சியின் எம்.பி. ஜான் அமரதுங்க, வடக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் இலங்கை வரவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்காத இந்திய பிரதமர், வடக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று அங்கு செல்வதற்காக இலங்கை வந்தால், அதனை ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கும். இதுபோன்ற அழைப்புகளை நாட்டின் அதிபர்தான் விடுக்கமுடியுமே தவிர, மாகாண முதலமைச்சர் விடுக்க முடியாது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் சதித்திட்டமாக இருக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications