ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் முறைகேடு.. சிக்குகிறார் ராஜபக்சே 'மைத்துனர்' நிசாந்த விக்கிரமசிங்கே!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மிகப் பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அதன் இயக்குநராக இருந்த ராஜபக்சே மைத்துனர் நிசாந்த விக்ரமசிங்க முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் நிகழ்ந்ந்த முறைகேடுகள் குறித்து ஜே.சி.வெலியமுன தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மைத்துனருமான நிசாந்த விக்ரமசிங்க, தமது பதவியை முறைகேடாக பயன்படுத்தினார் என்பதும் புகார்.

Sri Lanka Panel Calls for Prosecutions, Probe Into State Airline

விமான சேவையின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதால் பல கோடி ரூபாய் நட்டம்; நுழைவுத் தேர்தலில் வெற்றி பெறாதாவர்களுக்கு விமானத் துறை பணியிடங்கள், முறைகேடான ஒப்பந்தங்கள் என நிசாந்த மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் வெலியமுன தலைமையிலான விசாரணைக் குழு வலியுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+