போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது உலக நாடுகளின் கோரிக்கை.
இந்நிலையில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
தற்போது ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசே விசாரணை நடத்தும். இதுதொடர்பாக 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
ஐ.நா. அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்துவது நாட்டின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு எதிரானது. இத் தீர்மானத்தின் மீது வருகின்ற 17, 18 தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications