ரணில் வீட்டிற்கு கரண்ட் கட்.. சிறிசேனா அதிரடி நடவடிக்கை.. இலங்கையில் தொடரும் பரபரப்பு!
Recommended Video

கொழும்பு: இலங்கையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசித்து வரும் இல்லத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு யார் பிரதமர் என்று அரசு அதிகாரிகளுக்கே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அருவருப்பாக மாறி வருகிறது.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
[அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு!]

எங்கு இருக்கிறார்
இலக்கை பிரதமரின் இல்லம் டெம்பிள் ட்ரீஸ் (Temple Trees) என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசித்து வருகிறார். பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றபின் கூட இவர் அந்த வீட்டில் இருந்து வெளியேற மறுத்து வருகிறார்.

மின்சாரம் நிறுத்தம்
இந்த நிலையில் அவரை வெளியேற வைக்கும் வகையில் அந்த வீட்டிற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை அந்த வீட்டிற்க்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. இன்று வரை 24 மணி நேரமாக அங்கு மின்சாரம் இல்லை. முன்னாள் பிரதமருக்கு நேர்ந்து இருக்கும் இந்த கதி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை
அதேபோல் ரணிலுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு படை பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு 52 அதிகாரிகள் அவருக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். தற்போது இது 8 அதிகாரிகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பதவியிலும் இல்லாதா கோத்தபய ராஜபக்சவிற்கு 70 அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குகிறார்கள்.

பாதுகாப்பு அதிகரிப்பு
இதனால் ரணில் தற்போது தனக்கு நெருக்கமானவர்களை தனது பாதுகாப்பிற்கு நியமனம் செய்துள்ளார். தனது ஆதரவாளர்களை தான் வசிக்கும் டெம்பிள் ட்ரீக்கு வெளியே சுற்றி நிற்க வைத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications