இனப்படுகொலை என்பதா?: தமிழக முதல்வருக்கு இலங்கை அமைச்சர் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பதற்கு அந்நாட்டு அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து இலங்கை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், இலங்கையில் நடந்த போர் சம்பவங்களை இனப்படுகொலை என கடுமையான வார்த்தைகளால் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இலங்கையின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கண்டனம் முறைப்படி இந்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications