இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் விடுதலை
கொழும்பு: இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கச்சத்தீவு அருகே கடந்த வாரம் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.

அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் கடற்படை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் காவலை அக்டோபர் 21-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கொழும்பு கடற்படை தளபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் மீனவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விரைவில் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications