இலங்கை நாடாளுமன்றம் 24-ந் தேதி கலைக்கப்படுகிறது?
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் வரும் 24-ந் தேதி கலைக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிபர் மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அரசியலில் முடங்கிப் போனார்.
அவரது வசம் இருந்த சிறிலங்கா சுதந்திர கட்சியும் சிறிசேன வசமாகி உள்ளது. ஆனாலும் மகிந்த ராஜபக்சே எப்படியும் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு வியூகம் வகுத்து வருகிறார்.

இதனிடையே இலங்கையில் அதிபரின் அதிகாரம் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தை வரும் 24-ந் தேதி அதிபர் சிறிசேன கலைக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications