இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் சகோதரருக்கு "கோடாலி" வெட்டு!
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் சகோதர் பிரியந்த சிறிசேன கோடாலியால் தாக்கப்பட்டதால் படுகாயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மைத்ரிபாலவின் சகோதர் பிரியந்த சிறிசேன, பொலன்னறுவ என்ற இடத்தில் தமது நண்பர் கரகே லக்மல் என்பவருடன் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரியந்த சிறிசேனவை, கோடாலியால் கரகே லக்மல் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதில் படுகாயங்களுடன் நிலைகுலைந்த பிரியந்த, பொலன்னறுவ மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொழும்புக்கு பிரியந்த சிறிசேன கொண்டு செல்லப்பட்டார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரியந்த சிறிசேனவை கோடாலியால் வெட்டிய கரகே லக்மல், போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு சரணடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications