முஸ்லிம்கள் இல்லாவிட்டால் புலிகளுடனான யுத்தம் முடிந்திருக்காது: இலங்கை கூட்டுப்படை தளபதி
முஸ்லிம்கள் இல்லாவிட்டால் புலிகளுடனான யுத்தம் முடிந்திருக்காது: இலங்கை கூட்டுப்படை தளபதி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: முஸ்லிம்கள் இல்லாவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிந்திருக்காது என இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான சிங்களர் வன்முறை தாக்குதல்கள் குறித்து இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவிந்தீர விஜயகுணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது முஸ்லிம் மக்கள் எமக்கு உதவியாக இருந்தார்கள். உளவுத்துறை சார்ந்து மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர்.
சிங்களர் உயிரோடு இருப்பதற்கும் வீதிகளில் குண்டுகள் வெடிக்காமல் இருப்பதற்கும் காரணமே முஸ்லிம்களின் ஒத்துழைப்புதான். அவர்களது மொழி அறிவு எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருந்தது.
முஸ்லிம் மக்களைப் நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ரவிந்தீர விஜயகுணவர்த்தன கூறினார்.












Click it and Unblock the Notifications