இலங்கை: கோத்தபாய ராஜபக்சே அரசு பதவி விலக வலியுறுத்தி களுத்துறையில் ஜே.வி.பி. பிரமாண்ட போராட்டம்
கொழும்பு: இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி களுத்துறையில் ஜேவிபியினர் இன்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.

தலைநகர் கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தற்போது ஜேவிபியும் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறது. களுத்துறையில் இன்று ஜேவிபி சார்பில் பிரமாண்ட கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

Recommended Video
இதேபோல் நாளை மாலை கொழும்பு-புறக்கோட்டையில் ஜேவிபியின் இளைஞர் அணியினர் போராட்டம் நடத்தினர். வரும் 23-ந் தேதி நுகேகொடையிலும் வரும் 29-ந் தேதி பொலன்னறுவையிலும் போராட்டங்கள் நடைபெற உள்ளன.












Click it and Unblock the Notifications