இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: 196 இடங்களுக்கு ராஜபக்சே உள்பட 6,151 பேர் போட்டி!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கான 196 எம்.பி. இடங்களுக்கு மொத்தம் 6,151 பேர் போட்டியிடுகின்றனர். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் 13 எம்.பிக்களைத் தேர்வு செய்ய 462 பேர் வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் எம்.பி.க்களின் எண்ணிக்கை 225. இவர்களில் 196 பேர் மக்களால் நேரடியா தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள். எஞ்சியோர் கட்சிகளால் நியமிக்கப்படும் எம்.பி.க்கள்.

இலங்கை நாடாளுமன்றம் கடந்த ஜூன் 26-ந் தேதி நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 6-ந் தேதி தொடங்கி நேற்று பகல் 12 மணிவரை நடைபெற்றது.
மொத்தம் 6,151 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார். இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3, 653 வேட்பாளர்கள், சுயேட்சைகளாக 2, 498 வேட்பாளர்கள் அடங்குவர்.
யாழ்ப்பாணத்தில்...
தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் 13 எம்.பிக்களைத் தேர்வு செய்ய 462 பேர் வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 எம்.பிக்களை தேர்வு செய்ய 210 வேட்பாளர்களும்
வன்னி மாவட்டத்தில் 6 எம்.பிக்களை தேர்வு செய்ய 252 வேட்பாளர்களுமாக
மொத்தம் 462 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications