கிளிநொச்சியில் தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை: அதிர்ச்சித் தகவல்
கொழும்பு: இலங்கை கிளிநொச்சியில் வாழும் தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாக கிறிஸ்தவ போதகர் ஒருவர் வாடிகனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னர் கிளிநொச்சி நகரம் விடுதலை புலிகளின் தலைநகரமாக இருந்தது. பின்னர் விடுதலை புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அங்கு இலங்கை ராணுவம் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் வாழும் தமிழ்ப்பெண்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் கட்டாய கருத்தடை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலைப்பாடு வேரவில், சிரஞ்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் மங்களராசா என்பவர் கத்தோலிக்க மத தலைமை இடமான வாடிகனுக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழ் பெண்களை கட்டாய படுத்தி அரசு கருத்தடை செய்து வருகிறது. இதை தடுக்க கத்தோலிக்க சபை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாவட்ட சுகாதார அதிகாரி ரவீந்திரன் கூறும்போது, ‘இந்த புகார் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது' என்றார்.












Click it and Unblock the Notifications