தீர்ப்புக்குப் பிறகு நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது : ஹாசினியின் தந்தை உருக்கம்
தீர்ப்புக்குப் பிறகு நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது என்று சிறுமி ஹாசினியின் தந்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video

செங்கல்பட்டு : குற்றவாளிக்கு தக்க தண்டனை கிடைத்ததன் மூலம் ஹாசினியின் மரணத்திற்கு நீதிகிடைத்துள்ளது. இதன் மூலம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது என்று ஹாசினியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறுமி ஹாசினி கொலைவழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மரண தண்டனை விதித்தார்.

இதனையடுத்து ஹாசினியின் தந்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கதறி அழுதார். அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடந்த ஒரு வருடமாக என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. இந்த சம்பவம் என்னை மிகவும் அலைக்கழித்தது.
இந்த தீர்ப்பு என்னை நிம்மதி அடைய வைத்துள்ளது. இதன் மூலம் என் மகள் மீண்டும் உயிர் பெற்று வரமாட்டாள் என்று எனக்குத் தெரியும். ஆனால், இது போன்ற தவறு செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
இந்த வழக்கு நடைபெறும் காலத்தில் என்னிடம் பலர் நீதித்துறையை நம்பவேண்டாம். நீதி கிடைப்பதற்கு காலதாமதம் ஆகும் என்று கூறினார்கள். ஆனால், இன்று இந்தத் தீர்ப்புக்குப் பிறகு நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.
இந்த தீர்ப்பிற்காக என்னோடு போராடிய எங்களது தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்று உருக்கமாகப் பேசினார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications