இலங்கை நாடாளுமன்றத்தில் 3-வது பெரும் கட்சியாக உருவெடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி 14 இடங்களைக் கைப்பற்றி அந்நாட்டின் 3வது பெரிய கட்சியாக தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சிங்களர் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தின.

இருப்பினும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை இடங்களை தமிழ் தேசக் கூட்டமைப்பே கைப்பற்றியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் மொத்தம் உள்ள 7 இடங்களில் 5; வன்னியில் உள்ள 6-ல் 4 ஐ தமிழ் தேசக் கூட்டமைப்பு வென்றுள்ளது.
இதேபோல் மட்டக்களப்பில் 3 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. திருகோணமலை, அம்பாறையில் தலா 1 இடத்தில் இக்கூட்டமைப்பு வாகை சூடியுள்ளது.
மொத்தம் 14 இடங்களைக் கைப்பற்றி தமிழ் தேசக் கூட்டமைப்பு இலங்கை நாடாளுமன்றத்தின் 3வது மிகப் பெரிய அரசியல் கட்சியாக உருவாகியுள்ளது. மேலும் கூட்டமைப்பு பெற்றிருக்கும் வாக்குகளின் அடிப்படையில் 1 அல்லது 2 எம்.பி.க்கள் கூடுதலாக கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 15 அல்லது 16 எம்.பி.க்கள் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications