இலங்கை வடக்கு தேர்தல்- தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி- டக்ளஸ் கேவல தோல்வி
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கிறது.
ராஜபக்சேவின் கட்சியும், அந்தக் கட்சிக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியும் கேவலமாக தோற்றுள்ளன. டக்ளஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

தமிழர்களின் தாயகமான வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வாக்குகளைப் பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தம் பதிவான தபால் வாக்குகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டும் 7,625 வாக்குகள் கிடைத்தன. மன்னார் மாவட்டத்தில் 1,300 வாக்குகளையும், வவுனியா மாவட்டத்தில் 901 வாக்குகளையும், கிளிநொச்சி மாவட்டத்தில் 756 வாக்குகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 646 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருந்தது. இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றியுள்ளது.
மொத்தம் உள்ள 38 தொகுதிகளில் 30 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து கூட்டணியின் முதண்மை வேட்பாளரான ஓய்வுபெற்ற இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதல்வராக பதவியேற்கிறார்.
ராஜபக்சேவின் கட்சிக்கு 7 இடங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது. ராஜபக்சேவின் ஆதரவு பெற்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறாமல் படுதோல்வியுடன் கேவலமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
வடக்கு மாகாண தேர்தலில் பதிவான வாக்குகளில் 66 சதவீதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணிக்கு கிடைத்துள்ளது. கிளிநொச்சியில் 81 சதவீதமும், முல்லைத்தீவில் 78 சதவீதமும் ஆதவாக கிடைத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணிக்கு இரண்டு நியமனத் தொகுதிகள் கிடைக்கும் என்பதால், அதன் பெரும்பான்மை 32 ஆக உயரும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications