இலங்கை வடக்கு தேர்தல்- தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி- டக்ளஸ் கேவல தோல்வி
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கிறது.
ராஜபக்சேவின் கட்சியும், அந்தக் கட்சிக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியும் கேவலமாக தோற்றுள்ளன. டக்ளஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

தமிழர்களின் தாயகமான வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வாக்குகளைப் பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தம் பதிவான தபால் வாக்குகளில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டும் 7,625 வாக்குகள் கிடைத்தன. மன்னார் மாவட்டத்தில் 1,300 வாக்குகளையும், வவுனியா மாவட்டத்தில் 901 வாக்குகளையும், கிளிநொச்சி மாவட்டத்தில் 756 வாக்குகளையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 646 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருந்தது. இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றியுள்ளது.
மொத்தம் உள்ள 38 தொகுதிகளில் 30 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து கூட்டணியின் முதண்மை வேட்பாளரான ஓய்வுபெற்ற இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதல்வராக பதவியேற்கிறார்.
ராஜபக்சேவின் கட்சிக்கு 7 இடங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது. ராஜபக்சேவின் ஆதரவு பெற்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறாமல் படுதோல்வியுடன் கேவலமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
வடக்கு மாகாண தேர்தலில் பதிவான வாக்குகளில் 66 சதவீதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணிக்கு கிடைத்துள்ளது. கிளிநொச்சியில் 81 சதவீதமும், முல்லைத்தீவில் 78 சதவீதமும் ஆதவாக கிடைத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணிக்கு இரண்டு நியமனத் தொகுதிகள் கிடைக்கும் என்பதால், அதன் பெரும்பான்மை 32 ஆக உயரும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications