காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க முதல்முறையாக இலங்கை செல்கிறது ஐ.நா குழு
கொழும்பு: இலங்கையில் போரின்போது, காணாமல் போனது தொடர்பாக, விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வருகை தர உள்ளது.
பலவந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் வரும் 9ம் தேதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அரசின் அழைப்பிற்கு ஏற்ப இந்தப் பிரதிநிதிகள் இலங்கை செல்ல உள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்க ஆட்சிக் காலங்களில் இந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகைதர விரும்பியபோதெல்லாம், அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களை தடுக்க தற்போதைய அரசு எவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதை பிரதிநிதிகள் ஆராய உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குதல், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு இந்தப் பிரதிநிதிகள் செல்ல உள்ளனர். அரசு அதிகாரிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications