இலங்கையின் அம்பாறையில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

Undersea earthquake off Ampara
அம்பாறை: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கடலுக்கு அடியில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாக அந்நாட்டின் புவியியல் வல்லுநர் திசநாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் இந்த வெடிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்த மாற்றம் காரணமாக அதிகளவிலான நிலநடுக்கத்தை இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இலங்கையின் கிழக்கே கடலுக்கு அடியில் மிதமான நிலநடுக்கம் உருவானது பதிவாகி இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகள் பதிவாகி இருந்தது.

தற்போது வல்லுநர்கள் எச்சரித்தது போல் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+