இலங்கையில் மீண்டும் வன்முறை- முஸ்லிம் கடைகளை எரித்து சிங்கள கொடி ஏற்றம்- ராஜபக்சே ஆதரவு போலீஸ் சதி?
இலங்கையில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறைகளின் பின்னணியில் ராஜபக்சே ஆதரவு போலீஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

கண்டி: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மீண்டும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கண்டியில் முஸ்லிம்களின் கடைகளை எரித்து சிங்கள கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. இந்த அசாதாரண சூழல்களுக்கு ராஜபக்சே ஆதரவு போலீஸ் கும்பலே காரணம் எனவும் கூறப்படுகிறது.
இலங்கையின் அம்பாறை, கண்டியில் முஸ்லிம்களை குறி வைத்து சிங்களர் திடீர் தாக்குதல் நடத்தினர். முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
சிங்கள பவுத்த பிக்குகளே இந்த வன்முறைகளை அரங்கேற்றினர். இதனால் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

மீண்டும் வன்முறை
இதையடுத்து வன்முறை பரவாமல் தடுக்க இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் கண்டி, மாத்தளை பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரை
முஸ்லிம்களின் எஞ்சிய வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடந்துள்ளது.

சிங்கள கொடி ஏற்றம்
இத்தகைய வன்முறைகளின் பின்னணியில் ராஜபக்சே ஆதவு போலீசார் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எரிக்கப்படும் முஸ்லிம் வர்த்தக நிறுவனங்கள் முன்பாக சிங்கள கொடியும் ஏற்றப்பட்டு வருகிறது.

ஊரடங்கு அமல்
இதையடுத்து கண்டி உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும்; பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது,












Click it and Unblock the Notifications