ஊரடங்குக்கு எதிர்ப்பு.. மாஸ்க் அணியாமல் வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்.. ஆஸி.யில் பரபரப்பு!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா முதல் அலை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
ஆனால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா வைரசே அங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி, கான்பெர்ரா நகரங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சிட்னி நகரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 163 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இதனால் சிட்னியில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை தவிர பிற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை. இந்த நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்து சிட்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் மாஸ்க் அணியாமல் வீதிகளில் திரண்டனர்.

மக்கள் போராட்டம்
சிட்னியின் விக்டோரியா பூங்காவிலிருந்து மத்திய வணிக மாவட்டத்தின் டவுன்ஹால் வரை பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். சுதந்திரம் வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியடி அவர்கள் பேரணியாக சென்றனர். சிட்னி மட்டுமில்லாது பிற ஆஸ்திரேலிய நகரங்களிலும் மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டனர். மெல்போர்னில் மாஸ்க் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு 'சுதந்திரம்" என்று கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.

போலீசார் கைது செய்தனர்
தற்போது ஊரடங்கு காரணமாக எந்த வித போராட்டத்துக்கும் போலீசார் அனுமதி கொடுக்காததால், விதிமுறைகளை மீறி திரண்டவர்களை போலீசார் கைது செய்தனர். ''சுதந்திரமான பேச்சு மற்றும் அமைதியான கூட்டத்தின் உரிமைகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் இப்போது மக்கள் கூட்டமாக திரள்வது பொது சுகாதார உத்தரவுகளை மீறுவதாகும்'' என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண போலீசார் தெரிவித்தனர்.

உரிமை உண்டு
இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண அமைச்சர் பிராட் ஹஸார்ட் கூறுகையில், நாம் ஒரு ஜனநாயகத்தில் வாழ்கிறோம், பொதுவாக நான் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமைகளை ஆதரிப்பவன். ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் வீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்' என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications