உறவினர்களே மறுக்கும்போது.. கொரோனா சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்யும்.. தப்லீக் ஜமாத் தன்னார்வலர்கள்
திருத்தி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் முறையான இறுதிச் சடங்கைச் செய்து வருகின்றனர்.
நாட்டில் தினசரி கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளது. இதனால் நாட்டிலுள்ள பல நகரங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களைத் தகனம் செய்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

கொரோனா உயிரிழப்புகளால் மயானங்களில் உடல்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது இந்நிலையில்,ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் முறையான இறுதிச் சடங்கைச் செய்து புதைத்து வருகின்றனர்.
தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 60 தன்னார்வலர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தினசரி குறைந்தபட்சம் 15 உடல்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். உயிரிழப்பவரின் மத சடங்குகளைப் பின்பற்றியே உடல்கள் புதைக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பல இடங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்களே முன் மறுக்கின்றனர். இந்தச் சூழலில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்களின் இறந்தவர்களின் உடல்களை முறையாக இறுதிச் சடங்கு செய்கின்றனர். இந்த சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு கொரோனா பரவ தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் டெல்லியில் நடத்திய கூட்டம் தான் காரணம் என தொடர்ந்து செய்திகள் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications