வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ கஞ்சா பறிமுதல்.. கோவையில் தம்பதி கைது
கோவையில் தம்பதியினரிடம் இருந்து 1,000 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையை அடுத்த சூலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கஞ்சா விற்பனை குறித்து விசாரிக்க சூலூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கருமத்தம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் சூலூர் அருகே பட்டணம் பகுதியில் வசித்து வரும் ரவி - தேன்மொழி வீட்டில் நேற்று இரவு சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மூட்டை, மூட்டையாக கஞ்சா அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பின்னர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளதும் தெரிய வந்தது. அந்த இடங்களில் சோதனை நடத்த போலீசார் விரைந்துள்ளனர்.
போலீசாரிடம் சிக்கிய ரவி, தேன்மொழி ஆகியோர் பெரிய நெட்வொர்க் மூலம் கஞ்சா விற்பனை நடத்தி வந்துள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை செய்து வந்துள்ளனர். பிடிபட்ட தேன்மொழி மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தேன்மொழியின், சகோதரி மற்றும் அவரது கணவர் சொக்கன் தேனி மாவட்டத்தை சேர்ந்த மிகப்பெரிய கஞ்சா வியாபாரி என்றும் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!










Click it and Unblock the Notifications