தொடர்பண்டிகைகள் எதிரொலி: நாளை முதல் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் பண்டிகைகள் வருவதால், நாளை முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை, தமிழகம் முழுக்க 1,000 சிறப்பு பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் விடுமுறைகள் வருவதால், நாளை முதல், அக்டோபர் 2 வரை, தமிழகம் முழுக்க, 1,000 சிறப்பு பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில், நாளை, ஆயுத பூஜை, நாளை மறுநாள், விஜயதசமி, அக்டோபர் 1ஆம் தேதி மொகரம், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி என, தொடர்ந்து நான்கு நாட்கள், அரசு விடுமுறை வருகிறது. இதனால் அந்த விடுமுறையை பயன்படுத்தி அதிகம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கும் வெளியூர்களுக்கும் செல்ல வாய்ப்புள்ளது.

1,000 special buses across Tamil Nadu from tomorrow to October 2

அவர்களுக்காக, நாளை முதல், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் நாளை முதல் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1,000 special buses across Tamil Nadu from tomorrow to October 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+