ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இதுவரை 10 பேர் மனு தாக்கல்...
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இதுவரை 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 6 வதாக ஜெயலலிதா தாக்கல் செய்துள்ளார்
வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாள் ஆகிவிட்ட நிலையில், இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

சுயேட்சை வேட்பாளர்களாக ராமதாஸ், மனோகரன், வெங்கடேஷ், வசந்தகுமார், குமாரசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா 6 வதாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு மாற்று வேட்பாளராக அ.தி.மு.க. வின் அவைத் தலைவர் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், மோகன்ராஜ், அப்துல் வாஹித், மாரிமுத்து ஆகிய சுயேட்சை வேட்பாளர்கள் என வெள்ளிக் கிழமை வரை மொத்தம் 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications