100 கிலோ கஞ்சாவுடன் வந்த லிங்குச்சாமி கைது.. மதுரையில்!
மதுரை: மதுரைக்கு ரயிலில் 100 கிலோ கஞ்சாவுடன் வந்திறங்கி லிங்குச்சாமி என்ற நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா கடத்தல் பல ரூபங்களில் தங்கு தடையின்றி நடக்கிறது. வயது வித்தியாசமில்லாமல், ஆண், பெண் என்று பாகுபாடு இல்லாமல் பலரும் கஞ்சாத் தொழிலில் இருந்து வருகின்றனர்.
பெரும்பாலும் கஞ்சா வியாபாரிகள் கஞ்சா கடத்தலை பெண்கள் மூலமாக அதிலும் வயதான பெண்கள் மூலமாகத்தான் அதிகம் செய்வார்கள். அப்போதுதான் சந்தேகப்பட மாட்டார்கள் என்று. ஆனால் அப்படிப்பட்ட பெண்களைத்தான் அதிக அளவில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து மூட்டை மூட்டையாக கஞ்சாவுடன் வந்த ஒரு துணிகர நபரைப் போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். அவரது பெயர் லிங்குச்சாமி.
இவர் 100 கிலோ கஞ்சாவுடன் ஆந்திராவிலிருந்து மதுரைக்கு ரயிலில் வந்தார். ரயில் நிலையத்தில் வைத்து அவரை ரயில்வே போலீஸார் சோதனையிட்டபோது கஞ்சாவுடன் சிக்கிக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications