திருட்டுப் பசங்களுக்குப் பயந்து மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட 100 பவுன் நகைகள் மாயம்!
நாகர்கோவில்: திருட்டுப் பயம் காரணமாக மண்ணுக்குள் பத்திரமாக நகைகளை ஒருவர் புதைத்து வைத்திருந்தார். அந்த நகையும் காணாமல் போனதால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
நாகர்கோவில் பொதுப் பணித்துறை சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். கோணம் அரசு பாலிடெக்னிக்கில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையம் வந்து தனது வீட்டில் வைத்திருந்த 100 பவுன் நகை மாயமாகி விட்டதாகவும், அதை போலீசார் மீட்டுத்தர வேண்டும் என்றும் கூறினார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் போலீசாரிடம் நாகராஜன் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு சொந்தமான 100 பவுன் நகைகளை வங்கி லாக்கரில் கடந்த 7 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து வந்தேன். வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்காது என நான் நினைத்ததால் அந்த நகைகளை ஒரு பையில் வைத்து கட்டி எனது வீட்டின் கீழே உள்ள குடோனில் மண்ணில் புதைத்து இருந்தேன்.
சம்பத்தன்று காலை பிளம்பிங் வேலைக்காக அந்த குடோனுக்கு சென்ற நான் அங்கு நகைகள் வைத்திருந்த பை திறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைநதேன். அதில் இருந்த 100 பவுன் நகை மாயமாகி இருந்தது. அந்த நகைகளை யாரோ திருடிச் சென்றுள்ளனர். போலீசார் விசாரித்து அந்த நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் நாகராஜனின் வீட்டுக்கு சென்று அவர் புகார் கூறிய குடோனை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் அவரது மனைவி பாமாவிடமும் நகை மாயமானது பற்றி விசாரணை நடத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications