வியர்க்குரு, அம்மை நோய் வராமல் தடுக்க வேண்டுமா? நம்பிக்கையோடு இதை செய்யுங்க

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இன்று சேத்தாண்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இன்று நடைபெற்ற சேத்தாண்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் களிமண்ணை உடலில் பூசிக் கொண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

கமுதி முத்துமாரியம்மன் கோயிலின் பங்குனி உத்தர திருவிழா மார்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 13-ம் நாள் சேத்தாண்டி திருவிழாவையொட்டி ஊரணி கரையில் களிமண்ணை பக்தர்கள் உடல் முழுவதும் பூசி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்தினர்.

100 years old Seththandi function in Kamudi

இத்திருவிழாவில் பக்தர்கள், அக்னிசட்டி, பூச்சொறிதல், திருவிளக்குபூஜை, உருண்டு கொடுத்தல் உட்பட பல நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இத்திருவிழாவில் பங்கேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

கோடை காலத்தில் அம்மை, வியர்க்குரு, வேனல் கட்டி போன்ற தோல் வியாதிகளை தவிர்க்க திருவிழாக்களில் இதுபோன்ற இயற்கை மருத்துவத்தை வழிபாட்டு முறையாக பொதுமக்கள் காலம் காலமாக நம்பிக்கையோடு பின்பற்றி வருகின்றனர். கடந்த 100 ஆண்டாக கமுதியில் இந்த சேத்தாண்டி வழிபாடு நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+