ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு விரைவில் பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறலாம். இவ்வாறு பதவி பெற்றவர்கள் இடமாறுதல் பெறலாம் என்ற நடைமுறை இருந்தது.

ஆனால் அதை கல்வி துறை மாற்றி அமைத்தது. பதவி உயர்வுக்கு பின் இடமாறுதல் பெற முடியாது என்றும், தேர்ந்தெடுத்த பதவி உயர்வில் இருந்தே அடுத்த பதவி உயர்வு இருக்கும் என்றும் தெரிவித்தது. இதை ஆசிரியர்கள் கடுமையாக எதிர்த்தனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் பழைய நடைமுறையை பின்பற்றப்படும் என கல்வி துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பதவி உயர்வுக்கு தகுதி உடையோர் பட்டியல், காலி பணியிட விபரம் போன்ற விபரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் பதவி உயர்வு மற்றும் ஓதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் விரைவில் 1000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+