11 கூடுதல் எஸ்.பிக்கள் இடமாற்றம்.. டிஜிபி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 11 கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்களை டிஜிபி ராமானுஜம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை வெளி மாவட்டங்களில் பணியில் இருந்தவர்களான மலர்விழி, மங்கையர்க்கரசி ஆகியோர் மீண்டும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் சென்னை காவல்துறை அகாடமியில் கூடுதல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மதுரை காவல்துறைப் பயிற்சிப் பள்ளியில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்து வந்த வசந்தகுமாரி, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தலைமையக கூடுதல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவுகளை டிஜிபி ராமானுஜம் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications