இது தான் பைனல் லிஸ்ட்: ஏற்காடு இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் போட்டி
ஏற்காடு தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் சரோஜா, தி.மு.க. சார்பில் மாறன் உள்ளிட்ட மொத்தம் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்புமனுக்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சபாபதி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க. வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 12 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான இன்று ஒருவர் மட்டும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். எனவே, அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க. வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
ஏற்காடு தொகுதியில் டிசம்பர் 4-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.