தோற்றாலும்.. தன்னம்பிக்கையை துளியும் கைவிடாத ஓ.பி.ஓஸ்!
சென்னை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைக்குள் எதிர்க்கட்சியினரை வெளியேற்றி விட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வென்றுள்ளது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் கூட ஓ.பி.எஸ் அணியினர் சற்றும் தன்னம்பிக்கையை விடவில்லை.
சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக உறுப்பினர்களை தாக்க வெளியேற்றி விட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் தாமாக வெளியேறி விட்டனர். ஓ.பி.எஸ் அணியினர் மட்டும் தைரியமாக உள்ளே இருந்தனர்.

சட்டசபைக்குள் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்களும் தனித்து விடப்பட்ட போதிலும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் வெளியே வந்த அவர்கள் தங்களது தன்னம்பிக்கையை சற்றும் கை விடாத நிலையில் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications