மக்கள் எதிர்ப்பிற்கிடையில் 112 அடி சிவன் சிலை திறப்பு.. பிரதமர், முதல்வர் பங்கேற்பு
மக்களின் கடுமையான எதிர்ப்பு போராட்டத்திற்கிடையே 112 அடி சிவன் சிலை கோவையில் திறக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கோவை: ஈஷா யோகா மையம் சார்பில் இன்று 112 அடி சிவன் சிலை கோவையில் திறக்கப்பட்டது. ஜக்கி வாசுதேவ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து, மோடி இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானைகள் நடந்து போகும் பாதைகளை ஆக்கிரமித்து இயற்கைக்கு விரோதமான முறையில் சிவனுக்கு சிலை அமைத்துள்ளார் ஈஷா யோகா மைய ஜக்கி வாசுதேவ் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து வழக்கு கூட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. மேலும், ஆதிவாதிகளின் வாழ்விடங்களை அபகரித்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இதனால், பல்வேறு சமூக இயக்கங்கள் ஜக்கி வாசுதேவிற்கு எதிராகவும் அவர் நடத்தி வரும் யோகா மையத்திற்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கொஞ்சமும் அதுபற்றி சிந்திக்காமல் பிரதமர் மோடி இதில் பங்கேற்றுள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே போன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications