கோவில் திருவிழா முன்பகை- சீர்காழி மோதலில் போலீஸ் ஏட்டு உட்பட 12 பேர் படுகாயம்!
சீர்காழி: நாகை மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு கிராமத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் ஒரு போலீஸ்காரர் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீர்காழியை அடுத்த திருவெண்காடு அருகே கீழமூவர்கரை கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தினந்தோறும், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இரண்டு கிராமத்தினர் மோதல்:
இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற கலை நிகழ்ச்சியை காண வந்த அகரபெருந்தோட்டம் கிராமத்தினருக்கும், கீழமூவர்கரை கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
வழிமறித்து தாக்குதல்:
இதனால் இரு கிராமத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று கீழமூவர்கரை மீனவர் கிராமத்தை சேர்ந்த சிலர் பூம்புகார் சென்றுவிட்டு, அகரபெருந்தோட்டம் கிராமம் வழியாக ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது அகரபெருந்தோட்டம் கிராமத்தினர் சிலர் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
கல், கட்டையால் தாக்குதல்:
தாக்குதலில் காயம் அடைந்தவர்கள், கீழமூவர்கரை கிராமத்திற்கு சென்று, இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் தெரிவித்தனர். உடனே கீழமூவர்கரை கிராம மக்கள் 100 பேர் அகரபெருந்தோட்டம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது 2 கிராம மக்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கல் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர்.
12 பேர் படுகாயம்:
ஒரு டிராக்டரும் சேதப்படுத்தப்பட்டது. இந்த மோதலில் காயம் அடைந்த கீழமூவர்கரை கிராமத்தை சேர்ந்த சந்திரன், பாலகிருஷ்ணன், இளங்கோவன் , பிரவீன், குமார், சித்ரவேல், சசிக்குமார், கிருஷ்ணசாமி, குணசேகரன் ஆகிய 9 பேரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி:
இதேபோல், காயம் அடைந்த அகரபெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மணி, ராஜேஷ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயம் அடைந்த பாரதி திருவெண்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடரும் பதட்டம்:
மோதல் குறித்த தகவல் கிடைத்ததும் திருவெண்காடு போலீஸ் ஏட்டு செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது கல்வீசப்பட்டதில் செல்வராஜ் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications