கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து கிளம்பும் 12 ரயில்கள் நாளை ரத்து !
சென்னை: கனமழை காரணமாக சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து கிளம்பும் 12 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
1. மதுரையில் இருந்து இன்று நள்ளிரவு நிஜாமுதீன் புறப்பட வேண்டிய சம்பர்க் கிராந்தி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
3. சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. எழும்பூரில் - கயா புறப்பட வேண்டிய வாராந்திர ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
5.சென்ட்ரல் - லக்னோ விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
6. திருவனந்தபுரம் - கோரக்பூர் ரயிலும் நாளை ரத்து செய்யப்பட்டுளது.
7. விழுப்புரம் - கரக்பூர் வாரம் இருமுறை ரத்து செய்யப்பட்டுளது.
8. ஆழப்புலா - தன்பாத் விரைவு ரயில் நாளை ரத்து.
9. விஜயவாடா - சென்னை, சென்னை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
10.விஜயவாடா பினாகினி ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
11.கூடூர் - சென்னை பயணிகள் ரயில் ரத்து
12. சென்னை - கூடூர் பயணிகள் ரயில் நாளை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications