ரூ. 3 கோடி பணம், 3 கிலோ தங்கத்துக்கு வாங்கப்பட்ட 122 எம்.எல்.ஏக்கள்.. ஆனந்தராஜ் பரபர!
சசிகலா அணியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேருக்கும் தலா 3 கிலோ தங்கம், 3 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர் என்று நடிகர் ஆனந்தராஜ் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். 122 எம்எல்ஏக்களும் குடும்பத்தின்
சென்னை: அதிமுகவின் 122 எம்எல்களையும் ஆளுக்கு 3 கோடி ரூபாயும், 3 கிலோ தங்கமும் கொடுத்து சசிகலா அணி விலைக்கு வாங்கிவிட்டதாக நடிகர் ஆனந்தராஜ் புகார் கூறியுள்ளார்.
122 எம்எல்ஏக்களும் குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா தலைமையை ஏற்க விரும்பாத நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகினார். எனினும் சசிகலா அணிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேரும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மக்களின் விருப்பத்திற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார்.
அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேருக்கும் ஆளுக்கு தலா ரூ. 3 கோடியும், 3 கிலோ தங்கமும் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது மிக மோசமான முன்னுதாரணம் என்று தெரிவித்தார் ஆனந்தராஜ்.