ஜெ., வெற்றிக்காக தொகுதிக்கு 1 மொட்டை... திருப்பதியில் 134 பேர் நேர்த்திக்கடன்
சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றதை ஒட்டி, அதிமுக தொண்டர்கள் தொகுதி வாரியாக மொட்டை போட்டு ஊர்வலம் வந்தனர். 134 பேர் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில், அதிமுக வெற்றிபெற்று, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றால், தொகுதிக்கு ஒருவர் வீதமாக மொட்டை அடிப்பதாக அதிமுகவினர் வேண்டுதல் வைத்திருந்தனர். அதன்படி, அதிமுக வெற்றி பெற்று தற்போது ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்துள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அதிமுக வென்ற 134 தொகுதிகளைச் சேர்ந்த அக்கட்சித் தொண்டர்கள் மொட்டை அடித்தனர். மொட்டை அடித்தது மட்டுமின்றி, இன்று ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டம் பகுதியில் அவர்கள் ஊர்வலமாக வந்திருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக தொண்டர், அம்மாவிற்காக இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாக தெரிவித்தார். தொகுதிக்கு ஒரு மொட்டை என மொத்தம் 134 மொட்டைகளை போட்டுக்கொண்டு வந்து அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற வந்திருப்பதாக கூறினர்.












Click it and Unblock the Notifications